ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து....
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சிவசக்தி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து சிமெண்ட் பாரதம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் தேநீர் அருந்துவதற்காக லாரியை நிறுத்தி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராமல், பின்னால் வந்த சரக்கு வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி உள்ளார். அப்பொழுது அதன் பின் வந்த திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக 50 பக்தர்களுடன் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் விபத்தை தவிர்ப்பதற்காக வாகனத்தை திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து தடுப்புச் சுவரை தாண்டி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு லாரியின் ஓட்டுனர் காயமடைந்தார். மேலும் ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கவிழ்ந்ததில் இருவருக்கு மட்டுமே காயமடைந்தனர். மீதமுள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :