ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்

by Staff / 24-12-2022 11:52:41am
ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்

தவறுதலாக வேறு ரயிலில் ஏறியதை உணர்ந்த 65 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து நடைமேடை மீது குதித்தார். இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்லம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸில் தவறுதலாக ஏறிய சாகர்பாய் என்ற பெண் ஓடும் ரயிலில் இருந்து வேகமாக குதித்தார்.அவர் நடைமேடையில் விழுந்து சுயநினைவை இழந்தார். பணியில் இருந்த ரயில்வே கான்ஸ்டபிள் மற்றும் சில பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via