கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் 72,000 படுக்கைகள் தயாராக உள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 24-12-2022 05:05:43pm
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் 72,000 படுக்கைகள் தயாராக உள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் 72.000 படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர், ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கிறது என்றும், அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via