ரயிலில் தொடரும் வடமாநிலத்தவர்கள் அவலம்: அடித்து துரத்திய போலீசார்

by Staff / 27-12-2022 03:52:10pm
 ரயிலில் தொடரும் வடமாநிலத்தவர்கள் அவலம்: அடித்து துரத்திய போலீசார்

கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், அமர்ந்து இடம் தர மறுத்து அடாவடி செய்யும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வு இன்றும் நடந்த நிலையில் முன்பதிவு செய்தவர்கள் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டது. டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 1000 பேரை காவல்துறையினர் வெளியேற்றினர்.அதன் பின்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 4 பேர் அமரக்கூடிய இடத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து, முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுபோல் நடப்பதால், ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via