.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

by Staff / 14-07-2023 11:29:17am
.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகையில் வாகனசோதனையின்போது ஆட்டோவில் கடத்தி வந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த சில நபர்கள் தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் மது மற்றும் சாராய கடத்தலை தடுக்க நாகை மாவட்டத்தில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

 

Tags :

Share via