7 வயது சிறுவனை கொலை செய்த கொடூர அத்தை
கோவையில் 7 வயது சிறுவனை அவனது அத்தை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் கைரல் இஸ்லாம் என்ற 7 வயது சிறுவன் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்தான். சிறுவனின் தாயுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிறுவனின் அத்தை நூர்ஜகான் தன் தம்பி மகனை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :