சபரிமலை கோவிலுக்கு ரூ.222.98 கோடி வருவாய்

by Staff / 28-12-2022 10:57:28am
சபரிமலை கோவிலுக்கு ரூ.222.98 கோடி வருவாய்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று இரவு பக்தர்கள் தரிசனம் முடிந்து கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனிடையே, இந்த 41 நாட்களில் 30 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 39 நாட்களில் ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் வாரியம் தெரிவித்துள்ளது. மகரவிளக்கு விழாவுக்காக இம்மாதம் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு விழா முடிந்து ஜனவரி 20ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

 

Tags :

Share via