பொங்கலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன் இந்த மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. 2024 தேர்தலை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர்களின் செயல்திறன், இலாகாக்கள் அடிப்படையில், புதியவர்களில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பான விவகாரங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது.
Tags :