வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

by Editor / 02-01-2023 08:32:13am
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதேப்போல் சென்னையை அடுத்த திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயிலிலும், கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

 

Tags :

Share via