கடலில் விடப்பட்ட 113 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்

by Staff / 10-01-2023 12:41:25pm
கடலில் விடப்பட்ட 113 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்

நாகை சாமந்தான்பேட்டை கடல் பகுதியில் 113 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நடப்பாண்டு ஆலிவ் ரெட்லி ஆமைகள் 827 முட்டைகள் இட்டுச் சென்றுள்ளன. இந்த முட்டைகளை நாய், கீரி, பறவைகள் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில், வனத்துறை ஊழியர்களை கொண்டு தனிக்குழுவால் சேகரிக்கப்பட்டன. கடந்த நவம்பர் 17ஆம் தேதி சாமந்தான்பேட்டை கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த 113 ஆமைக் குஞ்சுகள் வனத் துறையினரால் சாமந்தான்பேட்டை கடற்கரை பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.

 

Tags :

Share via