சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

by Staff / 21-01-2023 02:28:13pm
 சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி அரசமரத்து தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தாய், சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via