நான்கு மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு திங்கள் விடுமுறை.

by Admin / 02-12-2023 11:27:00pm
நான்கு மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு திங்கள் விடுமுறை.

 மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,,, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் ,யானம் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு 4 .12.2023 தேதி விடுமுறை  அளித்து உத்தரவிட்டுள்ளது புதுச்சேரி அரசு.

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை நிலையம் அறிவிப்பு.

 

நான்கு மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு திங்கள் விடுமுறை.
 

Tags :

Share via