புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது
சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகக்கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி தொடங்கி ஜனவரி 22 வரை 17 நாட்கள் நடைபெற்றது. இத்துடன் 4 நாட்களுக்கு சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் இன்று இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று அதிக அளவில் புத்தக ஆர்வலர்கள் புத்தகம் வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :