பெண் புகார் - அரசு மருத்துவர் கைது.

by Editor / 22-01-2023 12:39:43pm
பெண் புகார் - அரசு மருத்துவர் கைது.

மதுரை திருமலை நகரைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கும், உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் சந்திரன் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஒன்றரை லட்ச ரூபாய் பணத்திற்காக கணவர் சரண்ராஜ்-யை மருத்துவர் சந்திரன் கடத்தி வைத்துள்ளதாக மனைவி வினிதா மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவர் சந்திரனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் கடத்தி வைத்திருந்த சரண்ராஜ் -யை மீட்ட போலிசார், அரசு மருத்துவர் சந்திரனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via