நாடாளுமன்றம் முன் தீக்குளித்து தற்கொலை
செவ்வாய்கிழமை நேபாளத்தின் பெடரல் நாடாளுமன்றம் முன் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நபர் இல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சார்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் கிர்திபூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேம் பிரசாத்துக்கு 80 சதவிகித தீக்காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
Tags :