பணம் வைத்து சூதாட்டம் - மூவர் கைது

by Staff / 27-01-2023 04:49:40pm
பணம் வைத்து சூதாட்டம் - மூவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மேலவளவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2500 ரூபாய் ரொக்க பணம், சீட்டகட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via