பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் பலி
இஸ்ரேலின் ஜெருசலேம் ஜெப ஆலயத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். ஷபாத் தொழுகையில் பங்கேற்ற இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீன பயங்கரவாதி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, பயங்கரவாதி தப்பி ஓட முயன்றான், ஆனால் போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :