வடமாநிலத்தவர்கள் கைது

by Staff / 30-01-2023 01:43:53pm
 வடமாநிலத்தவர்கள் கைது

திருப்பூரில் சில இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக சேர்ந்து விரட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஜத்குமார், பரேஷ்ராம் ஆகிய இளைஞர்களை கைது செய்தனர். இதனால் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிற வட மாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். முன்னதாக திட்டமிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டு பிரச்சனை ஆக்கப்படுவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via