16 வயது சிறுவனுடன் 32 வயது பெண்ணுக்கு தொடர்பு
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 32 வயதுடைய பெண் ஒருவர் 16 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்ததாக சிறுவனின் தாய் போலீசில் புகார் செய்துள்ளார். அந்தப் பெண் நாசிக்கில் தனது உறவினர்களுடன் தங்கியிருப்பதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி, அவனுடன் உடலுறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தானே, கல்யாணில் உள்ள கோல்சேவாடி காவல் நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
Tags :