வெம்பக்கோட்டை இரண்டாவது கட்ட அகழாய்வில் மண்பானை கண்டுபிடிப்பு,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்லியல் அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, பாசி மணி, சுடுமண் பொம்மைகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இவை தற்போது அதே அகழாய்வு தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வரும் சுழலில், இது வரை தோண்டப்பட்ட 15 குழிகளில் சுடுமண் பொம்மை, காதணி, எடைக்கல், சங்கு வளையள்கள், யானை தந்தத்தால் ஆன பகடை பகடைக்காய், சங்கு வளையல்கள் உட்பட 2850 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு நிற பானையின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
Tags :