பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திற்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் 

by Editor / 10-02-2023 12:18:11am
பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திற்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சார்ந்த துரை என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் போஸ்ட் பெய்டு  சிம் கார்டு திருநெல்வேலி பிரஸ் கிளப் மூலமாக வாங்கியுள்ளார் போஸ்ட் பெய்டு சிம்கார்டுக்கு மாத கட்டணமாக ரூபாய் 200 செலுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது போஸ்ட் போயிடு சிம் கார்டை ப்ரி பெய்டு சிம் கார்டாக மாற்றம் செய்ய பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளார் bsnl நிறுவனம்  பயன்படுத்திய வகைக்கு ரூபாய் 200/- கட்டணமாக செலுத்த தெரிவித்துள்ளது துரையும் ரூபாய் 200/- கட்டணமாக செலுத்தியுள்ளார். ஆனால்  போஸ்ட் பெய்டு சிம் கார்டு பயன்படுத்திய வகைக்கு ரூபாய் 133.45/- மட்டுமே செலுத்த வேண்டியது உள்ளது ஆனால் மனுதாரரிடம் கூடுதலாக 67/-ரூபாய் வசூல் செய்துள்ளார்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனுதார் துரை, பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக பிஎஸ்என்எல் நிறுவன ரூபாய் 5000/- வழக்குச் செலவு ரூபாய் 2000 /-சேர்த்து மொத்தம் ரூபாய்7000/- கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via