மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள்

by Staff / 10-02-2023 02:16:17pm
மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தினசரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று இரவு கடலுக்கு சென்ற அரங்கம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் தில் தனபால் என்பவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இரவு வீடு திரும்பி காலை வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தெர்மாகோல் உள்ளே எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய பேட்டரி மற்றும் சிப் போன்ற பொருட்கள் உள்ளே இருப்பதால் மேலும் பலூன் மூலமாக இது பறக்க விடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா அருகே கிடைத்ததாலும் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மர்ம பொருள் கிடைத்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via