இரண்டு மின்சார துறை கண்காணிப்பாளர்கள் பணியிடை நீக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நேற்று முழு மின் தடையுடன் கூடிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மணிகண்டன் என்ற ஊழியர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது உடலை பெற மறுத்து மணிகண்டன் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பான இரண்டு மின்சார துறை கண்காணிப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்து மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அதனடிப்படையில் ராமகிருஷ்ணன் மற்றும் செந்தூர் பாண்டி ஆகிய இரண்டு கண்காணிப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :