இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரை  காண ரசிகர்களுக்கு அனுமதி

by Editor / 24-07-2021 05:04:13pm
இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரை  காண ரசிகர்களுக்கு அனுமதி


 

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடரை காண 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் 5 டெஸ்ட் தொடர்களை அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட இருக்கிறது. இவர்களது முதல் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் துவங்குகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


அதன்படி, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது, இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர்களை 100% ரசிகர்களுடன் பார்வையிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளார். 


மேலும் ஜூலை 19-ம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவதை பற்றி அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரவில்லை என்பது குறித்தும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 

Tags :

Share via