நெல்லையில் கருப்பு பூஞ்சைக்கு முதியவர் பலி

by Editor / 06-07-2021 04:43:31pm
நெல்லையில் கருப்பு பூஞ்சைக்கு முதியவர் பலி

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சோழபுரம் குன்னக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமர் (72). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த மாதம் 5ஆம் தேதி கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிழந்தார்.
முன்னதாக, நெல்லை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டியை சேர்ந்த ஆண் ஒருவரும், கயத்தாறை சேர்ந்த பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், ராமர் மரணம் காரணமாக கருப்பு பூஞ்சைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.இதனிடையே, நெல்லை அரசு மருத்துவமனையில் தற்போது 20 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via