17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அரசு ஊழியர்

by Staff / 14-08-2023 03:47:23pm
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அரசு ஊழியர்

அரசு வழங்கும் மொபைல் போனை இலவசமாக தருவதாக கூறி 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். ராஜஸ்தானில் அரசு ஊழியர் சுனில்குமார் ஜாங்கிட் (35) குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுனில்குமார் சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அரசு மொபைல் போனை வழங்குவதாக, அறைக்குள் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கூச்சலிட்டதால், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பெற்றோர் வந்த பின்பு, சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து குற்றவாளி மீது தோதாபிம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தற்போது குற்றவாளி தலைமறைவாக உள்ளார்.

 

Tags :

Share via