தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் - சசிகலா உறுதி 

by Editor / 06-07-2021 04:21:55pm
 தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் - சசிகலா உறுதி 

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா, அதிமுகவின் தொண்டர்களைச் சந்திப்பேன் என்று தொடர்ந்து கூறிவருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில வாரங்களாகவே, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசிவரும் ஆடியோ வெளியாகி வருகின்றன. இதுவரை 120க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் சசிகலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டன.அதில், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரிடமும் கட்சியை, தான் மட்டுமே வழிநடத்திச் செல்ல முடியும். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறிவருகிறார்.இந்த நிலையில், ஊரடங்கு முடிந்த உடன் தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் என்று புதிய ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.
அதில், "ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத போது உழைத்து பெற்ற எம்எல்ஏ பதவியை, தூக்கி எறிவது சரியல்ல.கட்சியை ஜெயலலிதா வழியில் மீட்டு கொண்டு வருவேன். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது, நான் தான் முதல் தொண்டன் எனக் கூறுவார்.அதே போல் நானும் முதல் தொண்டன். கரோனாவால் ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவடைந்த உடன் அனைவரையும் சந்திக்கிறேன்" என்று பேசினார்.முன்னதாக, அவர் ஜூலை 5ஆம் தேதி அதிமுகவின் தொண்டர்களைச் சந்திப்பேன் என்று ஆடியோவில் பேசியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via