கடன் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை

by Staff / 03-03-2023 05:19:49pm
கடன் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை

கோவை வடவள்ளி அடுத்த காளப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர், 33 வயதான ரமேஷ், இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார், மேலும் இவர், மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்த ரமேஷ் தான், கடன் பிரச்சனை காரணமாக, விஷம் குடித்து விட்டதாக தனது மனைவி கவிதாவிடம் தெரிவித்துள்ளார், உடனடியாக அக்கம்பக்கத்தினர் தனது கணவரை மீட்ட கவிதா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிர் இழந்தார். , இது குறித்து கவிதா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

 

Tags :

Share via