இருந்து பேசினால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் -புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வந்திருந்தார்.சாமிதரிசனத்தை முடித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதலமைச்சர்களும், ஆளுநர்களும், உட்கார்ந்து பேசி இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இணக்கமாக பேசினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். மக்களுக்கும் நல்லது செய்ய முடியும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்தெரிவித்தார்.
Tags :