சென்னிமலை பகுதியில் தீ விபத்து

by Staff / 10-03-2023 02:04:07pm
சென்னிமலை பகுதியில் தீ விபத்து

சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த காட்டுப் பகுதியில் ஏரா ளமான மரங்கள் மற்றும் புல்வெளிகள் உள்ளன. இதில் சில பகுதிகளில் காய்ந்த புல் மற்றும் செடிகள் உள்ளது. தற்போது வெயி ளின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் மேலப்பாளையம் காட்டுப்பகுதி யில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீப்பற்றி மற்ற பகுதிகளில் பரவி எரிந்து கொண்டு இருந்தது. இதை கணடு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் உடனடியாக தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்து க்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதே போல் சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடி களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே சென்னி மலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலையத்தினர் தண்ணீரை பீச்சியடித்து தீ மேலும் பரவாமல் அணை த்தனர். இந்த 2 இடங்களிலும் நடந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரம் தீயை அணைக்கா விட்டால் அருகே உள்ள மரங்களில் தீ பற்றி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்துக்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. ஒரே நாளில் சென்னி மலை பகுதியில் 2 இட ங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via