கஞ்சா போதையில் கடப்பாரையால் கொலை

by Staff / 11-03-2023 11:47:18am
கஞ்சா போதையில் கடப்பாரையால் கொலை

திருவாரூர் மன்னார்குடி வாஞ்சியூரைச் சேர்ந்தவர் மோகன் (58). மனைவி கமலா. விவசாயிகள். இவர்களுக்கு அர்ஜுன், அரவிந்தன் என 2 மகன்கள் உள்ளனர். கட்டிட தொழில் செய்து வருகின்றனர். அரவிந்தன் மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் தம்பதியினர் மகன் வீட்டிற்கு வருவதற்குள் சமைத்து வைத்துவிட்டு அண்டை வீடுகளில் இருந்துள்ளனர். கஞ்சா போதையில் வந்த அரவிந்தன், கஞ்சா வாங்க பணம் கேட்டுள்ளார். தந்தை மோகன் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மகன், கடப்பாறையால் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். தப்பியோடிய அரவிந்தனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via