இம்ரான் கான் மீது ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

by Staff / 14-03-2023 02:27:47pm
இம்ரான் கான் மீது ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பெண் நீதிபதியை மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை வரும் 29ஆம் தேதிக்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via