பாலத்தில் இருந்து குதித்த நபர்
குஜராத்தின் சூரத் நகரில் செவ்வாய்க்கிழமை ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கபோத்ரா காவல் நிலையம் அருகே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் 50 வயது முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதை போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் பாலத்தில் இருந்து குதித்த நபரை கீழே வலைகளை விரித்து பிடித்தனர். அந்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளார். தலையில் படுகாயம் ஏற்பட்டது. அந்த நபரின் விவரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :