அசுர வேகம்..சட்டென தீ பற்றிய கார்.. சம்பவ இடத்திலேயே சோகம்
கோவா மாநிலம் பனாஜியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கோவா ராய்கர் மருத்துவமனை அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால், காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைபற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :