இறந்த உடலை பைக்கில் எடுத்து சென்ற அவலம்

by Staff / 17-03-2023 04:11:10pm
இறந்த உடலை பைக்கில் எடுத்து சென்ற அவலம்

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்ட மருத்துவமனையில், வாகனம் வழங்காததால் இறந்த உடலை உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் ஏடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபரின் உடலை எடுத்து செல்ல மருத்துவமனையில் வாகனம் கொடுக்க மறுத்ததால் உறவினர்கள் தங்களின் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via