பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

by Staff / 22-03-2023 03:15:00pm
 பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

காஞ்சிபுரம் அருகே குருவிமலை என்னும் இடத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென  ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் தீக்காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது, தீக்காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம்  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 11 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இவர்களில் ஐந்து நபர்கள் 100% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதுவரை  பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.பட்டாசு தொழிற்சாலையில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மாவட்ட ஆட்சியர் ஆர்கே ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்

 

Tags :

Share via