தாயின் உடலுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்த மகன்
போலந்து நாட்டில் உயிரிழந்த தாயின் உடலை பதப்படுத்தி 13 ஆண்டுகளாக சோபாவுக்குள் மறைத்து வைத்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர். போலந்து நாட்டில் உள்ள ராட்லின் என்ற பகுதியை சேர்ந்த மரியன் என்பவரது தாய் 2010ல் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உடலை அடக்கம் செய்த சில தினங்களில் மகன் மரியன் தாயின் உடலை மீண்டும் தோண்டி வீட்டுக்கு எடுத்து வந்து உடல் அழுகாதபடி பயன்படுத்தி வீட்டு சோபாவுக்குள் 13 ஆண்டுகளாக வைத்துள்ளார். இதையறிந்த காவல்துறையினர் மரியனை கைது செய்து அவரை மனநல டாக்டர்களின் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :