முக கவசம் கட்டாயம் - அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, தமிழ்நாடு முழுவதும் முககவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னோடி ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3000 ஆக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
Tags :