தாயின் கல்லறை அருகே மகன் தற்கொலை.

by Staff / 01-04-2023 02:58:56pm
தாயின் கல்லறை அருகே மகன் தற்கொலை.

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்றை பகுதியைச் சேர்ந்தவர் சிவநாடான். இவரது மகன் பிரபு (வயது37). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊருக்கு திரும்பினார். பின்னர் வெளிநாடு செல்லவில்லை. அவருக்கு திருமணமும் நடக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பிரபு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு தனது வீட்டருகில் உள்ள தாயின் கல்லறையருகே விஷம் அருந்தி வாந்தி எடுத்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது அண்ணன் ஜெகன் மணவாளக் குறிச்சி போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

 

Tags :

Share via