கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. முசோரி-டேராடூன் சாலையில் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
Tags :