ஒரே நபருடன் 5 திருநங்கைகள் திருமணம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சஞ்சப்பா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. கஞ்சன் நகரில் சிறப்பு திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மஹி, ஜோதி, ராணி, காஜல், சௌமியா ஆகிய ஐந்து திருநங்கைகள் அவர்களது குருவான சாரதா நாயக்கை திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண சடங்குகள் மூன்று நாட்கள் நடந்தன. இந்தியாவில் உள்ள திருநங்கைகளின் சங்கமான கினர் சமிதி விழாவை ஏற்பாடு செய்தது. திருமணம் செய்து கொண்ட திருநங்கைகள், சமூகத்தில் சமத்துவத்துக்காகப் போராடுகிறோம் என்றனர்.
Tags :