மதுரையில் குஜராத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது.

by Staff / 12-04-2023 03:13:55pm
மதுரையில் குஜராத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது.

மதுரையில் கருத்தரங்குக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சி. ஏ. (பட்டய கணக்காளர்) படித்து வந்துள்ளார். மதுரையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த படிப்பு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அப்பெண் விமானம் மூலம் இரவு மதுரை வந்தார். பின்னர் தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அதே விடுதியில் அவரது அறைக்கு அருகே பெண்ணிற்கு தெரிந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆஷீஷ்ஜெயின்(22) என்பவர் தங்கியிருந்தார். அந்த பெண்ணிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது இதுகுறித்து நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவரும் கருத்தரங்கிற்கு வந்த சென்னை மாடவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெரோம்கதிரவன் (22) என்பவருக்கு போன் செய்து அந்த பெண்ணிற்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.அதனை அந்த பெண் சாப்பிட்ட பின் அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.இது குறித்து சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் மதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.அது குறித்து நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷிஷ்ஜெயின், ஜெரோம்கதிரவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து ஆய்வாளர் கீதாலட்சுமி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

 

Tags :

Share via