மூன்று இலவச எரிவாயு சிலிண்டர் தரும் திட்டம்

by Staff / 30-03-2022 04:15:07pm
 மூன்று இலவச எரிவாயு சிலிண்டர் தரும் திட்டம்

கோவா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. முதல்வர் பிரமோத் சாவந்த், வீடுகளுக்கு ஆண்டு தோறும் மூன்று இலவச எரிவாயு சிலிண்டர் தரும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ.க, அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பிரமோத் சாவந்த் இரண்டாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
 
தேர்தல் பிரசாரத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் மூன்று இலவச 'எரிவாயு சிலிண்டர்கள்' வழங்கப்படும் என, பா.ஜ.க., அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையில், நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும்  திட்டத்தை செயல்படுத்துவது என முடிவானது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், குடும்பத்திற்கு மூன்று இலவச சமையல் காஸ் வழங்கும் திட்டம், வரும் நிதி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
 

 

Tags :

Share via