வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு குடும்பமே பலி
உத்திரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (செப்.16) அலம்பாக்கம் பழைய ரயில்வே காலனியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags :