இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொர்ட 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

by Admin / 05-03-2024 12:04:18pm
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொர்ட 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது ஆட்டம் வரும் 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .ஹிமாச்சல பிரதேஷ் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணி 59 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் இங்கிலாந்து அணி 25 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் 16 விழுக்காடு டிராவில் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.1 போட்டியில், இங்கிலாந்து அணி வென்று இருக்கிறது.. ஐந்தாவது போட்டியில் இந்தியா வெல்லா விட்டாலும் கூட இந்தத் தொடர் இந்திய அணிக்கே கிடைக்கும்.

 

Tags :

Share via