நோயாளியை தரதரவென இழுத்துச் சென்றனர்

by Staff / 15-04-2023 02:58:04pm
நோயாளியை தரதரவென இழுத்துச் சென்றனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நோயாளியை நகர்த்த ஸ்ட்ரெச்சர் இல்லாததால், அவரது பெற்றோர் நோயாளியை கால்களை பிடித்து இழுத்து இரண்டாவது மாடிக்கு சென்றனர். இச்சம்பவம் கடந்த மாதம் 31ஆம் தேதி நடந்ததாக தெரிகிறது. இது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 1500 நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், 15 ஸ்ட்ரெச்சர்கள் மட்டுமே உள்ளதாக அங்குள்ள நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

Tags :

Share via