ஒருதலைக் காதல் தோல்வியில் முடிந்ததால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

by Staff / 15-04-2023 01:58:29pm
ஒருதலைக் காதல் தோல்வியில் முடிந்ததால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜ்குமார் (25). லாரி டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது உறவினரின் மகளை ஒருதலையாக காதலித்து வந்தாராம். ஆனால் அந்த பெண் இவரது காதலை ஏற்கவில்லையாம். இதனால் மனவேதனையடைந்த ராஜ்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கயத்தார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via