டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையுடன் தொடர்புடைய சுற்றுலா இரயில் சேவை.

by Editor / 18-04-2023 09:23:34am
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையுடன் தொடர்புடைய  சுற்றுலா இரயில் சேவை.

IRCTC ஆனது முதல் அம்பேத்கர் சுற்று வட்டாரச் சுற்றுலா இரயில் சேவையினை தொடங்கியுள்ளது. எட்டு நாட்கள் அளவிலான இந்த சிறப்புப் பயணத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கான பயணம் அடங்கும். இராமாயணச் சுற்று, பௌத்தச் சுற்று மற்றும் வடகிழக்குச் சுற்று ஆகிய சிறப்புச் சுற்றுலாச் சுற்றுகளின் பட்டியலில் அம்பேத்கர் சுற்று நான்காவதாக சேர்க்கப் பட்டு உள்ளது. 'தேக்கோ அப்னா தேஷ்' திட்டத்தின் கீழ் 'பாரத் கௌரவ் சுற்றுலா இரயில்' இயக்கப் படுகிறது. இது சுற்றுலாத் துறை அமைச்சகம் மற்றும் இரயில்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு கூட்டு ஒத்துழைப்பு முயற்சியாகும்.

 

Tags :

Share via