சமையல் எரிவாயு சிலிண்டர்  விலை  25 ரூபாய் உயர்வு

by Editor / 17-08-2021 06:17:41pm
 சமையல் எரிவாயு சிலிண்டர்  விலை  25 ரூபாய் உயர்வு


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது.ஏற்கெனவே கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டிருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கூறப்படுகிறது.


கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்படத்தக்கது

 

Tags :

Share via