நடத்தையில் சந்தேகம் - காதலியை கொன்ற காதலன்

by Staff / 29-01-2024 01:00:59pm
நடத்தையில் சந்தேகம் - காதலியை கொன்ற காதலன்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி துறையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் வந்தனா. இவரும் ரிஷப் என்ற இளைஞனும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். சமீபகாலமாக வந்தனாவின் நடத்தையில் ரிஷப்பிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சனிக்கிழமை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று வந்தனாவை கொலை செய்துள்ளார் ரிஷப்.

 

Tags :

Share via